#பஞ்சாப் || குருத்வாரா வளாகத்தில் மது அருந்திய பெண் சுட்டுக்கொலை..! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் துக்னிவார்ன் சாஹிப் குருத்வாராவின் புனித நீர் தொட்டி அருகே பர்மிந்தர் கவுர்(32) என்ற பெண் மது குடித்துள்ளார். இதைப் பார்த்த, குருத்வாராவிற்கு அடிக்கடி வருகை தரும் நிர்மல்ஜித் சிங் என்பவர் துப்பாக்கியால் பலமுறை அப்பெண்ணை சுட்டுள்ளார். இதை எடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பாட்டியாலா எஸ்பி கூறுகையில், குர்த்வாரா துக்னிவார்ன் சாஹிப்பின் சரோவர் அருகே பர்மிந்தர் கவுர் மது அருந்தி கொண்டிருந்தார். இதை கவனித்த குர்த்வாரா சங்கத்தினர் அவரை மேலாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். ஆனால், அங்கிருந்த நிர்மல்ஜீத் சிங் சைனி என்ற நபர் அவரை சுட்டுக்கொன்றார். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman shot dead for consuming alcohol in gurdwara in Punjab


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->