பெண்ணை கொடூரமாக கொன்று உடல் எரிப்பு...! விசாரணையில் சிக்கிய கள்ளக்காதலன் கைது...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கள்ளக்காதலியை கொன்று உடலை எரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் மல்லந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்தாபுரா பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(50). இவர் அதே பகுதியில் உள்ள காபி தோட்டம் ஒன்றில் தொழிலாளியாக தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை தேடி வந்த வட மாநிலத்தை சேர்ந்த ஜெயம்மா(40) என்ற பெண்ணை சந்தித்த நாகராஜ், தான் வேலை பார்க்கும் காபி தோட்டத்தில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்று கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து இருவரும் காபி தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அப்பொழுது இவர்களிடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில், திடீரென ஜெயம்மா காப்பி தோட்டம் அருகே எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயம்மாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் போலீசார் விசாரணையில் நாகராஜ் தலைமறைவானது தெரிய வந்தது. இந்நிலையில் தலைமறைவான நாகராஜை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த போலீசார், நேற்று முன்தின இரவு கைது அவரை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த நாகராஜ், ஜெயம்மாவை அடித்து கொலை செய்து, உடலை தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman brutally murder and body burnt in Karnataka


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->