கால்கள் கட்டப்பட்ட நிலையில் குளத்தில் மிதந்த பெண் சடலம்..! தீவிர விசாரணையில் போலீசார்...!
woman body found floating in the pond with her legs tied in rajasthan
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் குளத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்த பெண் சடலம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள பாசாய் டாங் காவல் நிலையப் பகுதியில் தோல்பூர்-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் உள்ள குளத்தில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் இது குறித்து பாசாய் டாங் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குளத்தின் மிகுந்த பெண்ணின் இரண்டு கால்களும் கயிற்றால் கட்டப்பட்டிருந்துள்ளது. இதனால் முதற்கட்ட விசாரணையில், பெண் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசி இருக்கலாம் என்று பசாய் டாங் காவல் நிலைய பொறுப்பாளர் மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குளத்தில் மிதந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
woman body found floating in the pond with her legs tied in rajasthan