சிக்கன் சமைக்காததால் ஆத்திரத்தில் வீட்டை கொளுத்திய கணவன்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் மனைவி சிக்கன் சமைக்க மறுத்ததால் கணவன் வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி அருகே மது போதையில் ஒருவர் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் தனது மனைவியிடம் சிக்கன் சமைக்கும்படி கூறியுள்ளார்.

ஆனால், மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்து ஏற்கனவே பருப்பு சமைத்து விட்டதால் அதை சாப்பிடும்படி கூறியுள்ளார்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதையில் இருந்த கணவர் மனைவியை தாக்கி வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இதில், வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் தீயில் எறிந்து நாசமாகியது. அதன்படி, சுமார் 3 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife not cook chicken drunken husband fired house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->