ஆசையாக முத்தம் கொடுக்க வந்த கணவன் - ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


ஆசையாக முத்தம் கொடுக்க வந்த கணவன் - ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூரம்.!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தாராசந்த் நாயக்-புஷ்பவதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது குடும்பத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் இன்றும் வழக்கம் போல் தம்பதியினருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் தாராசந்த் மனைவியை சமாதானம் செய்யலாம் என்று லிப் கிஸ் கொடுப்பதற்கு மனைவிக்கு அருகில் சென்றுள்ளார். 

ஆனால் அதற்கு அவரது மனைவி மறுப்புத் தெரிவித்துள்ளார். இருப்பினும் தாராசந்த் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மனைவி புஷ்பவதி தன் கணவன் என்றும் கூட பார்க்காமல் நாக்கை கடித்துள்ளார். 

இதனால், கணவர் வலி தாங்கமுடியாமல் கதறி துடித்துள்ளார். இதையடுத்து தாராசந்த் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அனந்தபுரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து புஷ்பவதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தாராசந்த் கட்டாயப்படுத்தி எனக்கு முத்தம் கொடுக்க வந்தார். அதனால் அவரது உதட்டை நான் கடித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

wife bit husband tunk in andira


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->