கராச்சி துறைமுகத்தை தாக்கிய விக்ராந்த்...! உண்மை தகவல் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நேற்று இரவு ''ஆப்ரேஷன் சிந்தூா்'' எதிரொலியாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ''ஏவுகணை மற்றும் ட்ரோன்'' தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக அறவே முறியடித்தது.

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தானிலுள்ள லாகூர்,கராச்சி, பஹவல்பூர், பெஷாவர், இஸ்லாமாபாத்,  சியால்கோட், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது.இந்நிலையில் அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் அதிநவீன போர்க் கப்பலான ''விக்ராந்த்'', பாகிஸ்தானின் கராச்சி நகரைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கராச்சி துறைமுகம் தாக்கப்பட்ட சித்தரிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவை போலியானவை என்று உண்மை சரிபார்ப்பு மூலம் தகவல் தெரிய வருகிறது.

மேலும்,  காசாவில் 2020 நடந்த தாக்குதலின் புகைப்படத்தை தவறாக கராச்சி துறைமுகம் என்று பகிரப்படுவதாக தெற்காசியாவில் தவறான தகவல் போக்குகளைக் கண்காணிக்கும் ''அங்கிதா மஹலனோபிஷ்'' தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, எக்ஸ் தளத்தின் குரோக் சாட்பாட்டும் இதை, அவை போலியானவை என்று உறுதி செய்துள்ளது. மேலும் கராச்சி துறைமுக கள தகவல்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vikrant attacked Karachi port what true information


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->