சோகத்திலும் பெரும் சோகம்! ஆம்புலன்ஸ் - பிக்-அப் மோதல்; 5 பேர் பலி!
UttarPradesh ambulance Accident
அமேதி மாவட்டத்தில் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் பிக்-அப் வாகனம் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும், ஒருவர் படுகாயமடைந்து மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானாவில் இருந்து பிகாரின் சமஸ்திபூருக்கு அசோக் சர்மாவின் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ், பிக்-அப்பை பின்னால் இருந்து மோதி விபத்துக்குள்ளானதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்ட வேளையில் ஆம்புலன்சில் 2 ஓட்டுநர்களும், 4 குடும்பத்தினரும் இருந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர குமார் சிங் கூறினார். இதில் ஐவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இறந்தவரின் உடலோடு துக்கத்தோடு சொந்த மண்ணை நோக்கி சென்ற பயணத்தில், மேலும் 5 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
UttarPradesh ambulance Accident