படுக்கையெல்லாம் ஒரே புழுக்கள்.. அரசு மருத்துவமனையில் பதறிப்போன நோயாளிகள்.!!
Uttar Pradesh govt hospital worms
கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மக்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்க அரசு வழிவகை செய்து வருகிறது. மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனையில், அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள மருத்துவமனை வளாகங்கள் மிகுந்த சுத்தத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்து வரும் சூழலில், மஹோபா மருத்துவமனை வார்டில் உள்ள படுகைகளில் புழுக்கள் இருந்துள்ளது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அரசு மருத்துவமனை அதிகாரி, " வார்டு பாயிடம் இது குறித்து கூறி அவரிடம் சுத்தம் செய்ய சொன்னேன் என்றும், இது அறுவை சிகிச்சை வார்டாக இருந்து வருகிறது என்றும், நான் அறிவுறுத்தி எச்சரித்த பின்னர் வார்டு பாய் படுக்கையை சுத்தம் செய்ததாகவும் " கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh govt hospital worms