பாஜக தலைவர் வெட்டிக் கொலை: 16 பேருக்கு ஆயுள் தண்டனை! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் 2022ல் நடந்த பாஜக தலைவர் மற்றும் சமூக சேவகர் பசுபதிநாத் கொலை வழக்கில், 16 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாராணசியின் சிக்ரா பகுதியைச் சேர்ந்த பசுபதிநாத், அப்பகுதியில் சிறப்பாக சமூக சேவையில் ஈடுபட்டு, பாஜக நிர்வாகியாகவும் இருந்தார். 2022ம் ஆண்டு, அவரது மகன் ராஜ்குமார் சிங் சாராயக் கடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்றபோது, சிலர் அவரை தாக்க வந்தனர். தனது மகனை காப்பாற்ற முயன்ற பசுபதிநாத், கும்பலால் கடுமையாக வெட்டப்பட்டு உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேர் மைனர்களாக இருந்ததால், அவர்களுக்கான வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 பேர்மீது வழக்கு வாராணசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, நீதிபதி அனைவருக்கும் ஆயுள் தண்டனையை விதித்தார். மேலும் ஒவ்வொருவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP BJP Leader murder case judgement


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->