மீண்டும் இணைக்கப்படும் முன்பதிவில்லா பெட்டிகள்-தெற்கு ரயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரயில்சேவை படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்த நிலையில் 192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த வகையில் நாகர்கோயில் முத்துநகர்,   விரைவு ரயில்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும். மேலும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நெல்லை, குமரி, பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unreserved Boxes to Be Reconnected Southern Railway Announcement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->