பொள்ளாச்சி ஆன்மிகப் பயணிகள் நேபாளத்தில் விபத்து: 3 பேர் பலி - உடல்களை மீட்கக் கோரிக்கை!
Tragedy in Nepal 3 Pilgrims from Pollachi Killed in Van Accident Relatives Seek Govt Help
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற பக்தர்கள் சென்ற வேன், மலைப்பாதையில் இருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
விபத்து விவரங்கள்:
கடந்த மார்ச் 7-ம் தேதி, பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் முத்துக்குமார் (55), அவரது மனைவி மீனா (48) மற்றும் சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு ஆகியோர் 13 நாட்கள் பயணமாக நேபாளம் சென்றனர்.
அயோத்தி, முக்திநாத் உள்ளிட்ட இடங்களைத் தரிசித்துவிட்டு, புகழ்பெற்ற மனகாமனா கோவிலிலிருந்து திரும்பும் போது, காந்தர் மலைப்பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
பாதிப்புகள்:
வேனில் பயணம் செய்த 14 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த முத்துக்குமார், மீனா மற்றும் பாபு ஆகிய மூவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உறவினர்களின் கண்ணீர் கோரிக்கை:
உயிரிழந்தவர்களின் உடல்களை நேபாளத்திலிருந்து மீட்டு, சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy in Nepal 3 Pilgrims from Pollachi Killed in Van Accident Relatives Seek Govt Help