புதுச்சேரி - தமிழகம் இடையே பேருந்து.! உற்சாக செய்தியளித்த முதல்வர்.!
Today Oct 18 narayanasamy pressmeet
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்க கூடாது என்று கூறியது.
ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து இயக்கத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், "புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்து சேவை துவங்குவதற்காக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றோம்.
விரைவில் கொரோனா பாதிப்பு நன்றாக குறைந்து புதுச்சேரி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது. மருத்துவப் படிப்பினில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இது வரலாற்று துரோகம்." என்று கூறியுள்ளார்.
English Summary
Today Oct 18 narayanasamy pressmeet