கொடூரமாக பெண் அடித்துக்கொலை..! 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் நில தகராறில் பெண்ணை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் லட்சுமிதேவரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலக்ஷம்மா(35). இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயம் நிலம் உள்ளது. மேலும் இவரது இல்லத்திற்கு அருகே ராஜப்பா என்பவருக்கும் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் பாலக்ஷம்மா மற்றும் ராஜப்பா இடையே அடிக்கடி நிலப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து சம்பவத்தன்று இவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலக்ஷம்மா நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென பாலக்ஷம்மாவை சரமாரியாக இரும்பு கம்பியால் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பாலக்ஷம்மாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பாலக்ஷம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நில தகராறில் ராஜப்பா அவரது நண்பர்களான சந்திரசேகர், நாகராஜ் மற்றும் பசவராஜ் ஆகியோருடன் சேர்ந்து பாலக்ஷம்மாவை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman was brutally beaten to murder in Karnataka


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->