மனைவியை கொடூரமாக அடித்துக்கொன்ற கணவர்..! திருமணத்தில் நடனமாடியதால் ஆத்திரம்...! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் திருமணத்தில் நடனமாடியதால் மனைவியை அடித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பைகாபாடா பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர சிங் (35). இவரது மனைவி ஷர்மிளா சிங் (30). இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இரண்டு பேரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்று உள்ளனர். அப்பொழுது அங்கு உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

இதைப் பார்த்த ஷர்மிளாவும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். ஆனால் ஷர்மிளா நடனமாடியது, கணவர் ராமச்சந்திர சிங்குக்கு பிடிக்கவில்லை. இதையடத்து திருமணம் முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்தவுடன், ராமச்சந்திர சிங் ஷர்மிளா நடனமாடியதற்கு கடுமையாக திட்டி உள்ளார்.

இதனால் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராமசந்திர சிங் ஷர்மிளாவை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த ஷர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவியை அடித்துக்கொன்ற கணவர் ராமச்சந்திர சிங்கை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband brutally murder his wife in odisha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->