படகு விபத்தில் சிக்கிய அமைச்சர்! ஆற்றில் விழுந்த அமைச்சரை ஓடிவந்து மீட்ட போலீசார்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் படகு கவிழ்ந்த விபத்தில், அமைச்சர் தண்ணீரில் நிலை தடுமாறி விழுந்து உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பின், ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாகியது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம், அம்மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் ஆசிஃப் நகரில், தெலுங்கானா மாநில ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த கொண்டாட்டத்தில் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காங்குலா கமலாகர் கலந்து கொண்டார்.

முன்னதாக, அந்த பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால், படகின் மூலம் ஆற்றில் கடந்து செல்ல வேண்டும். அமைச்சரும் ஒரு படகு மூலம் செல்ல, அந்த படகு திடீரென கவிழ்ந்தது. 

அப்போது நிலைதடுமாறிய அமைச்சர் தண்ணீரில் விழுந்தார். உடனடியாக கரையில் இருந்த போலீசார், அமைச்சர் மற்றும் அவருடன் இருந்த நிர்வாகிகளை மீட்டனர். 

படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Minister river boat accident


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->