அந்த தாக்குதல்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை! மோதல் மேலும் தீவிரமடையும்! எச்சரித்த பாகிஸ்தான்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ தளங்கள் மீது நேற்றிரவு முழுவதும் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குறிப்பாக ஜம்மு, உதம்பூர் மற்றும் பஞ்சாபில் உள்ள பதான்கோட்டில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வழியாக இந்த தாக்குதல்கள் நடைபெற்றன.

இதனால் அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மக்கள் பதற்றமடைந்தனர். இந்திய ராணுவம் பெரும்பாலான பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்து அழித்து பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதான்கோட், ஜெய்சால்மர் மற்றும் ஸ்ரீநகர் மீது பாகிஸ்தான் தாக்கியதாக இந்திய ஊடகங்கள் பரப்பும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. இது ஒருபக்கம் அரசியல் நோக்குடன் செய்யப்பட்ட தவறான பிரச்சாரம். பாகிஸ்தானை குற்றவாளியாக காட்டும் இந்த முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கின்றோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசிக்கு அளித்த பேட்டியில், “காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நாங்கள் தாக்கினால் மறுக்க மாட்டோம். பாகிஸ்தான் செயல் மேற்கொள்வது என்றால், அது உலகம் முழுவதும் தெரிந்துவிடும் அளவிற்கு இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் மோதல் மேலும் தீவிரமடையும் சாத்தியக்கூறு இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pakistan attack Statement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->