வேதனையில் தமிழர்கள்! டெல்லியில் மதராஸி முகாம் இடிப்பு! காரணம் என்ன...? - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஜங்க்புரா பகுதியில் சுமார் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த இடம் ''மதராஸி முகாம்''. அங்குள்ள குடிசை வீடுகள் தற்போது இடிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணம் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக குடியிருப்புகளை இடிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

மேலும், மதராஸி முகாம் பகுதியில் கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகளை இடிக்கும் பணி பலத்த காவல் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.அதுமட்டுமின்றி, மதராஸி முகாமில் வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 50 கி.மீ. தொலைவிற்கு அப்பால் தமிழர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், 50 கி.மீ. தொலைவில் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு இடம் பெயர்ந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், ஜங்க்புராவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தங்களை வெளியேற்றுவதாகவும் தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil people ​​in pain Madrasi camp demolished in Delhi What reason


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->