முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள்.. சோனியா, ராகுல், பிரியங்கா மரியாதை.! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீர் பூமி என்ற பகுதியில் மழை தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக்கில் ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

மேலும், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இந்த விலைமதிப்பற்ற நினைவுகளில் இருந்து இந்தியாவைப் பற்றி நீங்கள் கண்ட கனவுகள் நிரம்பி வழிகின்றன. உங்கள் உங்கள் வழி தான் எனது வழி. ஒவ்வொரு இந்தியனின் போராட்டங்களையும், கனவுகளையும் புரிந்து கொள்வது அன்னையின் குரலில் கேட்பது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajiv Gandhi 79th birthday wishes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->