ராஜஸ்தான் அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி... 40 மாணவர்களின் நிலை?!
Rajasthan school Roof Collapses students death
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை ஏற்பட்ட கட்டிட விபத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர்.
பள்ளி திறந்த சில நிமிடங்களுக்குள், பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் உள்ளே இருந்த மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களது கூச்சல்களை கேட்ட அப்பகுதியினர் விரைந்து வந்து கான்கிரீட் துண்டுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த துயர நிகழ்வில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்; மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தகவல் கிடைத்ததும், ஜலாவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் புடானியா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பழுதடைந்த கட்டிடத்தைப் பற்றி முன்பே புகார்கள் இருந்ததா? பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அரசு தரப்பில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Rajasthan school Roof Collapses students death