தூங்கப் சென்ற காவலர் - துப்பாக்கி வெடித்து பலியான சோகம்.! - Seithipunal
Seithipunal


தூங்கப் சென்ற காவலர் - துப்பாக்கி வெடித்து பலியான சோகம்.!

தெலங்கானா மாநிலத்தில் சிறப்புக் காவல் படையின் பன்னிரெண்டாவது பட்டாலியனைச் சேர்ந்தவர் பூபதி ஸ்ரீகாந்த். இவர் இன்று அதிகாலை புறக்காவல் நிலையத்தில் தூங்கச் சென்றார். அதன் பின்னர், அவரது அறையில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. 

இந்தச் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, ஸ்ரீகாந்த் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துக் கிடந்துள்ளார். மேலும், அவர் பக்கத்தில் கார்பைன் துப்பாக்கியும் கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்ரீகாந்த்தை உடனடியாக மீட்டு உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். 

இதையறிந்த போலீசார் இந்தச் சம்பவத்தை சந்தேகத்திற்கிடமான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீகாந்தின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தின் நண்பரான வினய் தெரிவித்ததாவது, "சூர்யாபேட்டை மாவட்டம், அப்பண்ணாபேட் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த். 2018-ம் ஆண்டு பேட்ஜைச் சேர்ந்த இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்தார். 

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் தனது கடமையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வந்தார். படுக்கைக்குச் செல்வதற்கு முன், நாங்கள் வழக்கமாக எங்கள் ஆயுதங்களை புறக்காவல் நிலையத்தில் உள்ள லாக்கரில் வைப்போம். அப்போது துப்பாக்கி தவறாக வெடித்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police officer died in telungana for gun shoot


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->