ராமர் கோவில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மலர் தூவி மரியாதை.! - Seithipunal
Seithipunal


ராமர்கோவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது மலர்களைத் தூவி பிரதமர் மோடி நன்றி தெரிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் மூழ்கடித்தது.

அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த இந்த ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் 7,000-திற்கும் அதிகமான சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் இந்த விழாவை கண்டு ரசித்தனர். 

இந்தக் கும்பாபிஷேக விழாவிற்கு பின் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்தார். அவர்கள் மீது மலர்களை தூவி தனது நன்றியினை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi thanks to ramar temple builders


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->