11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 02 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்: பிரதமர் மோடி திறந்து வைப்பு..! - Seithipunal
Seithipunal


ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பில் 02 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி டெல்லியில் இன்று திறந்து வைத்துள்ளார். டில்லியின் துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கி.மீ நீளமுள்ள டில்லி பிரிவு சுமார் ரூ.5,360 கோடி செலவில் இந்த நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இது, 5.9 கி.மீ. ஷிவ் மூர்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டார்-21 வரையிலும், 4.2 கி.மீ. துவாரகா செக்டார்-21 ஐ டில்லி-ஹரியானா எல்லையுடன் இணைக்கும்.

இந்த திட்டம் அலிப்பூர் முதல் டிச்சான் கலான் வரையிலான நகர்ப்புற விரிவாக்க சாலை- பகுதி 02 ஆகும். இது பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் சுமார் ரூ. 5,580 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டுதேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

குறித்த துவாரகா விரைவுச் சாலையால், நொய்டா- டில்லி விமான நிலைய பயண நேரம் 20 நிமிடமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போது நெடுஞ்சாலை அமைக்க பணியாற்றிய தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். அதன்  பின்னர் அதிகாரிகள் நெடுஞ்சாலைகள் சிறப்பு குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi inaugurates 02 national highways worth Rs 11000 crore in Delhi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->