அடுத்த அதிர்ச்சி..ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொருங்கி 6 பேர் பலி?
Next shock helicopter crashes down and 6 people dead?
புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொருங்கி 6 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
குஜராத்தின் ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தநிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொருங்கி 6 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த தகவலை உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் முருகேசன் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் விமானி குழந்தை உட்பட ஆறு பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் மேல் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்துக்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Next shock helicopter crashes down and 6 people dead?