ம.பி : ஆற்றை கடக்க முயன்ற பக்தர்கள் - முதலைத் தாக்கி தண்ணீரில் மூழ்கிய சம்பவம்.!
near madhya pradesh eight peoples died for drowned river
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷிவ்புரி மாவட்டம் சிலாவாத் கிராமத்தில் குஷ்வாஹா சமூகத்தினர் சிலர் வசித்து வருகின்றனர். இவர்கள் கைலா தேவி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டனர்.
அதன் படி அவர்கள் அவர்கள் மொரீனா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் இறங்கி ஒருவருக்கொருவர் கையை பிடித்த வண்ணம் தண்ணீரில் நடந்துள்ளனர். அப்போது, திடீரென ஒரு முதலை அவர்களை தாக்கியுள்ளது. இதைப்பார்த்து பயந்து போன அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அந்த நேரத்தில் ஆற்றில் நீரோட்டமும் அதிகளவில் இருந்துள்ளதால் எட்டு பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். மீதமுள்ள, ஒன்பது பேர் நீந்தி கரை சேர்ந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதன் படி, போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரைக்கும் போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும், ஐந்து பேரின் உடல்கள் காணவில்லை என்பதால், அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.
English Summary
near madhya pradesh eight peoples died for drowned river