கல்லூரியில் நடனமாடிய மாணவி.! மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டம் டி நரசிப்புரா டவுன் பகுதிைய சேர்ந்தவர் நமிதா. இவர், அதேப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.யூ.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கல்லூரி சார்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அந்த நிகழ்ச்சியில், மாணவி நமிதாவும் கலந்து கொண்டு நடனம் ஆடினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் பேராசிரியர்கள் மாணவி நமிதாவை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பேராசிரியர்கள் நமிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் கல்லூரிக்கு சென்று கல்லூரி நிர்வாகத்தினரிடம் நமீதா உயிரிழந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்தனர்.ஆனால், அதற்கு கல்லூரி நிர்வாகத்தினர் சரியான பதில் அளிக்கவில்லை. 

இதனால், பெற்றோர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் கல்லூரிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் மாணவி உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்றுத் தெரிவித்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga collge student died on stage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->