வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய அட்மின்.! ஆத்திரத்தில் இளைஞர் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஹரியாணா மாநிலத்தில் உள்ள குர்கான் அருகே பட்டோடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் தனது செல்போனில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கியுள்ளார். 

அதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் வளர்க்கும் நபர்களை இணைத்துள்ளார். அந்த குழுவில், டென்னிஸ் பயிற்சியாளர் ஆனந்த்குமாரின் நாய் இறந்தது தொடர்பாக விவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது குழு உறுப்பினர்கள் சிலர் கிண்டலான செய்திகள் பகிர்ந்துள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஈட்டி எறிதல் வீரர் ஹிதேஷ் என்ற டேவிட், நொய்டாவில் டென்னிஸ் அகாடமி நடத்தி வரும் ஆனந்த் குமார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் பூபேந்தர் உள்ளிட்டோரை ராஜ்கமல் குழுவிலிருந்து நீக்கிவிட்டார். 

இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த குமார் உட்பட மூன்று பேர் ராஜ்கமலை கடுமையாக தாக்கியுள்ளனர். அதே நேரம் ஹிதேஷ் நாட்டு துப்பாக்கியால் ராஜ்கமலை சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜ்கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி, போலீசார் ஆனந்த் குமார், ஹிதேஷ், பூபேந்தர் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர். வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கியதால் ஆத்திரத்தில் குழுத்தலைவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near hariyana three peoples arrested for kill youth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->