ஆந்திரா : அனல்மின் நிலையத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 2 வடமாநிலத் தொழிலாளர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள என்.டி.ஆர். மாவட்டம் கொண்டப்பள்ளி பகுதியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். அதன் படி, 20 தொழிலாளர்கள் எழுவது மீட்டர் உயரத்தில் வேலை செய்வதற்காக மின் தூக்கியின் மூலம் மேலே சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து தொழிலாளர்கள் வேலை முடிந்த பின் மீண்டும் மின் தூக்கியில் கீழே இறங்கி வந்தனர். அப்போது திடீரென மின் தூக்கியின் கதவு திறக்காததால், தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கித் தவித்துள்ளனர். 

இதைப்பார்த்த ஊழியர்கள் சாவியை போட்டு மின் தூக்கியை திறந்துள்ளனர். அப்போது இருபது தொழிலாளர்களில் பதினெட்டு பேர் மட்டும் வெளியே வந்தனர்.  மேலும் இரண்டு பேர் வெளியில் வறுவதற்கு முற்பட்ட போது, திடீரென மின் தூக்கியின் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. 

பின்னர் அதே வேகத்தில் பலத்த சத்தத்துடன் வேகமாக கீழே விழுந்தது. இதில் உள்ளே இருந்த இரண்டு பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த படி கீழே விழுந்தனர். இதையடுத்து வெளியில் இருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near andira two north state peoples arrested for lift broke in Power station


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->