உ.பி : குழந்தை இல்லாததால் மருமகள் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த மாமியார்.! - Seithipunal
Seithipunal


உ.பி : குழந்தை இல்லாததால் மருமகள் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த மாமியார்.!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கவுசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாலி பேகம். இவருக்குத் திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இவருக்கு இதுவரைக்கும் குழந்தை இல்லை. இது தொடர்பாக சாலி பேகத்தின் மாமியார் அவரிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார். 

வழக்கம் போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியார், சாலி பேகத்தின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியுள்ளார். இதையடுத்து சாலி பேகம் சம்பவம் தொடர்பாக தனது சகோதரருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் விரைந்து வந்து பார்த்த போது சாலி பேகம், உயிருக்கு போராடியா நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனே அவர் சாலி பேகத்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சாலிபேகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த சாலி பேகத்தின் சகோதரர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் படி போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாததால் இளம்பெண்ணின் வாயில் மாமியார் விஷம் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother in law kill daughter in law for not pregnent in uttar pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->