தொங்கு பாலம் விபத்து: மோர்பி நகராட்சி நிர்வாக தலைமை அதிகாரி இடைநீக்கம் - Seithipunal
Seithipunal


குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக, குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஓரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் கைது செய்யப்பட 9 பேர் சார்பாக ஆஜராகப் போவதில்லை என்று குஜராத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில், பால விபத்து தொடர்பாக மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி பாலிகா சந்தீப்சிங் ஜாலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

பால விபத்து குறித்து மோர்பி நகராட்சி நிர்வாகம் நடத்திய விசாரணையில், அவர் கடமை தவறியதாக தெரியவந்ததையடுத்து, சந்தீப்சிங் ஜாலாவை மோர்பி நகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் பாலம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Morbi Municipal Corporation Chief Officer suspended


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->