அந்த நான்கு பேருக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி பேச்சு.!
Modi Wish Bhutan Scientist 4 Persons 20 November 2020
பூட்டான் நாட்டின் இரண்டாம் கட்ட ரூபே கார்ட் திட்டத்தினை இந்திய பிரதமர் மோடி மற்றும் பூட்டான் நாட்டின் பிரதமர் லோட்டே ஷேரிங் காணொளி வாயிலாக துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில்,
" இந்தியா தனது விண்வெளித்துறையான இஸ்ரோவை, தனியார் நிறுவனத்திற்காக திறந்துள்ளது. இது புதுமை மற்றும் திறன், திறமைகளை தொடர்ந்து அதிகரிக்கும். பூட்டான் நாட்டின் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா உதவி செய்கிறது.
இஸ்ரோ வரும் வருடத்தில் பூட்டானின் செயற்கைக்கோளை அனுப்ப இருக்கிறது. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. பூட்டான் நாட்டின் நான்கு விண்வெளி பொறியாளர்கள் டிசம்பர் மாதத்தில் இஸ்ரோவிற்கு சென்று பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Modi Wish Bhutan Scientist 4 Persons 20 November 2020