நாட்டையே உலுக்கும் சம்பவம்! பெண் மருத்துவருக்கு நடந்த பெரும் கொடுமை... சிக்கிய 4 பக்க தற்கொலை கடிதம்!
maharastra Female doctor suicide assault case police
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை காவல்துறை தேவேந்திர பட்னாவிஸ்
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் ஒருவர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உள்ளங்கையில், “எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். கடந்த ஐந்து மாதங்களாக மன, உடல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார்” என எழுதப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றிய புகாரை அவர் ஜூன் 19ஆம் தேதி ஃபல்டான் DSPக்கு எழுதிய கடிதத்திலும் முன்வைத்திருந்தது. அதில், கோபால் பத்னே உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள், துணைக் கோட்ட ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி ஆய்வாளர் லாட்புத்ரே தன்னை அடிக்கடி மிரட்டி துன்புறுத்துவதாகக் கூறியிருந்தார். மன அழுத்தத்தால் தவிக்கிறேன், எனவே நடவடிக்கை எடுக்கவும் என அவர் கேட்டிருந்தும் எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை.
தற்கொலையின் பின் போலீசார் ஹோட்டல் அறையில் மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை கண்டுபிடித்துள்ளனர். அதில், குற்றவாளிகளுக்குப் போலியான உடற்தகுதி சான்றிதழ் வழங்கும்படி தன்னை அழுத்தம் தந்ததாகவும், மருத்துவ பரிசோதனை இன்றி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அதிகாரிகள் மிரட்டியதாகவும் எழுதியிருந்தார்.
மேலும், ஒரு எம்.பி.யின் உதவியாளர்கள் இருவரும் வந்து தன்னை மிரட்டியதாகவும், எம்.பி.யே நேரடியாக போனில் அழைத்து மறைமுகமாக அழுத்தம் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த எம்.பி.யின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை.
பிரேதப் பரிசோதனையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கோபால் பத்னே பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது கோபால் தலைமறைவாக உள்ளார்; அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
maharastra Female doctor suicide assault case police