கொடூரம்" நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் அடுத்த மகளை அடித்தே கொன்ற தந்தை கைது!
Maharashtra NEET Student killed father
மகாராஷ்டிரம், சாங்லி மாவட்டம் அட்பாடி தாலுகா நெல்கரஞ்சி கிராமத்தில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக 16 வயது மகளை தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோண்டிராம் போசலே (45) என்றவர், ஒரு பள்ளியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். அவரது மகள் சாதனா, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வை எழுதினார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் தந்தை கோபமடைந்து, சனிக்கிழமை இரவு, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, மாவு அரைக்கும் இயந்திரத்தின் மரக் கைப்பிடியை எடுத்து, தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் மகளை கடுமையாக தாக்கினார். பலத்த காயங்களுடன் சாதனாவை சாங்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, சிறுமி உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனையில், உடலில் பலத்த காயங்கள் காரணமாக மரணம் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது என்று அட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் வினய் பாஹிர் தெரிவித்தார்.
சாதனாவின் தாயார் அளித்த புகாரின் பேரில், போசலேவுக்கு எதிராக வழக்குப் பதிந்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Maharashtra NEET Student killed father