#BigBreaking: நெஞ்சை பதறவைக்கும் விபத்து.. முழு பேருந்தும் நீருக்குள்.. 32 பேர் மூச்சுத்திணறி பலி..! - Seithipunal
Seithipunal


பேருந்து ஆற்றுப்பாசன கால்வாய்க்குள் கவிழுந்து விபத்துக்குள்ளானதில், 32 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 60 பேர் பயணம் செய்த நிலையில், அங்குள்ள பன்சாகர் கால்வாய் அருகே சென்றுள்ளது. 

இதன்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, பன்சாகர் கால்வாய்க்குள் கவிழுந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக 32 பேர் அதற்குள் பேருந்திற்குள்ளேயே உயிரிழந்தனர். 

மேலும், வாய்க்காலில் நீர் சென்று கொண்டு இருந்ததால், பேருந்து முழுவதும் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 7 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள அம்ம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 இலட்சம் நிதிஉதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhya Pradesh Bus Accident 32 Passengers Died 7 Rescued 15 Feb 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->