ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..!
Leaders including Prime Minister Modi condole the deaths of those died in RCBs victory celebration
பெங்களூரு கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, குறிப்பிடுகையில், பெங்களூருவில் நடந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இவரை தொடர்ந்து பாமக அன்புமணி அவர்கள் குறிப்பிடுகையில், அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெற்றிக் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு அணி வீரர்களை பார்க்க குவிந்த கூட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சின்னசாமி ஸ்டேடியம் அருகே இன்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இந்த கடினமான தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசும்போது வருத்தமாக இருந்தது. மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு செய்யும் என அவர்களிடம் உறுதியளித்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Leaders including Prime Minister Modi condole the deaths of those died in RCBs victory celebration