உயர்நீதிமன்றத்திலேயே உயிரை விட்ட வழக்கறிஞர் - நடந்தது என்ன?
lawyer died in hydrabad high court for heart attack
ஐதராபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் நாகேஸ்வர ராவ் என்ற வழக்கறிஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தவர் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ். இவர் நேற்று நீதிமன்றத்தில் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் துடித்துள்ளார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர், உடனடியாக நீதிமன்ற ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

அதன் படி ஓடி வந்த ஊழியர்கள் அவரை படுக்க வைத்து முதலுதவி செய்தனர். ஆனால் அவரது நிலை தொடர்ந்து மோசமாகியது. உடனே அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாகேஸ்வர ராவ் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்திற்கு மாரடைப்புதான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
lawyer died in hydrabad high court for heart attack