ஜெ.இ.இ. தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை.!!
JEE Exam Post pended 4 May 2021 Announcement
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு தேர்வுகளும் இரத்து செய்து மற்றும் தள்ளிவைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெ.இ.இ நுழைவுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் சேர நடைபெறும் ஜெ.இ.இ தேர்வு மே மாதம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவலால் ஜெ.இ.இ நுழைவுத்தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனை மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உறுதிப்படுத்தியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
JEE Exam Post pended 4 May 2021 Announcement