உலகத்தால் இந்தியா உச்சி முகரப்படும்... செமி கண்டக்டர் மாநாட்டில் பிரதமர் மோடி உரை!
India semiconductor manadu PM modi
நவீன மின்னணுவியலில் செமிகண்டக்டர்கள் அத்தியாவசிய பங்கு வகிக்கின்றன. ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவை பயன்படுகின்றன. உலகளவில் அதிக தேவை உருவாகியுள்ளதால், செமிகண்டக்டர் உற்பத்தியை முன்னிலை வகிக்க பல நாடுகள் போட்டியிடுகின்றன.
இந்தியாவை உலகின் முக்கிய செமிகண்டக்டர் மையமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். அதற்கான ஒரு பகுதியாக, இன்று “செமிகான் இந்தியா 2025” மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் உரையாற்றிய மோடி, “இன்று உலகம் இந்தியாவை நம்புகிறது. இந்தியாவுடன் இணைந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்கத் தயாராக உள்ளது. முதலீட்டாளர்கள் அனைவரையும் வரவேற்க இந்தியா தயாராக உள்ளது” என்றார்.
அவர் மேலும், “செமிகண்டக்டர் உலகில் எண்ணெய் கருப்பு தங்கம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சிப்புகள் டிஜிட்டல் வைரங்கள். கடந்த நூற்றாண்டை எண்ணெய் வடிவமைத்தது. ஆனால் 21ஆம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்பில்தான் உள்ளது. இந்த சிப் உலகின் வளர்ச்சியை வேகப்படுத்தும் திறன் கொண்டது. இந்தியாவில் உருவாகும் மிகச் சிறிய சிப் கூட உலகம் முழுவதும் இந்தியாவை உயர்த்தும் நாள் தொலைவில் இல்லை” என வலியுறுத்தினார்.
English Summary
India semiconductor manadu PM modi