நாட்டை உலுக்கிய தேனிலவு கொலை வழக்கு: மணப்பெண் உட்பட 5 பேர் மீது 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!
Honeymoon murder case that shook the country790 page chargesheet filed against 5 people including the bride
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா வரனிமுன் கொலை வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மேகாலயாவின் சோவீரரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 790 பக்கங்களைக் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை SIT சமர்ப்பித்துள்ளது.
இந்த வழக்கின் பின்னணி: மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சோனம் ஏற்கனவே குடும்பத்தின் தளபாட தொழிலில் கணக்காளராக பணியாற்றிய ராஜ் குஷ்வாஹாவை காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்த இவர்கள், மே 23ஆம் தேதி ஒரு ஹோம்-ஸ்டேயிலிருந்து வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனனர்.
பின்னர், ஜூன் 2ஆம் தேதி ராஜாவின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த சோனம், ஜூன் 8ஆம் தேதி உத்தரபிரதேசம் காஜிபூரில் போலிசில் சரணடைந்தார். இதற்கு முன், அவருக்கு உதவிய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 11ஆம் தேதி விசாரணையின் போது, சோனம் தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கணவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டது இந்த வழக்கை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
English Summary
Honeymoon murder case that shook the country790 page chargesheet filed against 5 people including the bride