திருட்டுத்தன கல்யாணத்தால் பிறந்த குழந்தை.. பொண்டாட்டியிடம் கையும் களவுமாக மாட்டிய உத்தம புத்திரன்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் வேஜல்பூர் பகுதியை சார்ந்தவர் ஷேக். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், இதன்போதே மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது மனைவியுடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் திடீரென கர்ப்பமாகியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. 

பெண் குழந்தையை தனது முதல் மனைவியிடம் கொடுத்து வளர்க்க முயற்சிக்கவே, குழந்தை அனாதையாக சாலையில் கிடந்தது என்று கூறி மனைவியிடம் ஒப்படைத்துள்ளார். சந்தேகமடைந்த முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், இரண்டாவது திருமணம் நடந்ததும் குழந்தை பிறந்ததும் உறுதியானது. இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவனை கைது செய்த நிலையில், அவரின் இரண்டாவது மனைவியை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat 2 Marriage Person Arrest by Police 20 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->