14 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் கைது.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த குற்றவாளிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் மற்றும் ரஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி இணையதளம் மூலம் விளம்பரம் செய்து வந்தனர்.

இதற்காக கால் சென்டர் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பெண்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளில் 1400 சிறுமிகள் மற்றும் பெண்களை விபச்சார தொழிலுக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். 

இந்தக் குற்றவாளிகள் மீது சைபராபாத் மற்றும் ஐதராபாத் எல்லைக்குள் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், இவர்கள் ஐதராபாத் மற்றும் சைபராபாத்தில் உள்ள கடத்தல் வழக்குகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் தொடர்பு கொண்டுள்ளனர். இதுவரை 14,190 பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி விபச்சார தொழிலில் தள்ளியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gang arrested for kidnap girls and childrens


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->