கோழிக்கறி சமைப்பதில் தகராறு.! ஹாலோ பிளாக் கல்லை போட்டு வாலிபரை கொன்ற நண்பர்...! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் கோழிக்கறி சமைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு வாலிபரை நண்பர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த தீராஜ்மண்டல் (27), சுஷில்கோஸ்வாமி (28) ஆகிய இரண்டு பேரும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜீடிமெட்லா சவுதாரிகுடாவில் சாமலா நரசிம்ம ரெட்டி நடத்தி வரும் ஹாலோ பிளாக் கல் உற்பத்தி பிரிவில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தின இரவு வழக்கம் போல் நண்பர்களான தீராஜ்மண்டல், சுஷில்கோஸ்வாமி, சுஜித் விஜய் கோஸ்வாமி மற்றும் பாலா நிமேஷ்குமார் ஆகிய நான்கு பேரும் மது அருந்தியுள்ளனர்.

அப்பொழுது சுஷிலிடம், தீரஜ் மண்டல் கோழிக்கறி சமைத்து தரும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு சுஷில் மறுப்பு தெரிவித்ததால் இவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் தூங்க சென்றுள்ளனர். அப்போது ஆத்திரத்தில் இருந்த சுஷில்கோஸ்வாமி, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து வந்து தீரஜின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தீரஜ் மண்டல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிர் இழந்த தீரஜ் மண்டல் சுடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சமூகம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய சுஷில்கோஸ்வாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Friend arrested for Murdering youth in Telangana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->