போதைப்பொருள் கடத்திய கில்லாடி பெண்கள் - அதிரடி காட்டிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


போதைப்பொருள் கடத்திய கில்லாடி பெண்கள் - அதிரடி காட்டிய போலீசார்.!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து கொக்கைன் என்ற போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின்படி அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து வந்த பெண் பயணிகள் நான்கு பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதன் படி அதிகாரிகள், அந்தப் பெண்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்டனர்.

அதில் பைக்கு அடியில் ஐந்து கிலோ கொக்கைன் போதைப்பொருள் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப் பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் நான்கு பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் லாவோஸ் நகரில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து டெல்லி வந்து பின்னர் ஐதராபாத்க்கு வந்தது தெரிய வந்தது. மேலும், கைப்பற்றப்பட்ட கொக்கைனின் சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய் என்பதும் தெரிய வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four womans arrested for drugs kidnape in hydrabad airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->