நேருக்கு நேர் மோதிய பள்ளி, கல்லூரி பேருந்துகள் - மாணவர்களின் நிலை என்ன?
four school students died in uttar pradesh for accident
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சேஹா நாவிகஞ்ச் பகுதியில் இன்று கல்லூரி பேருந்து ஒன்றும், பள்ளி வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பதினான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்துக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று கருதப்படுகிறது.
English Summary
four school students died in uttar pradesh for accident