உளுந்தூர் பேட்டையில் சோகம் - தீ விபத்தில் 4 பேர் பலி - 3 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


உளுந்தூர் பேட்டையில் சோகம் - தீ விபத்தில் 4 பேர் பலி - 3 பேர் படுகாயம்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அந்தத் தகவலின் படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றது.

அதில், தாய் திரவியம், இரண்டு மகள்கள், இவர்களைக் காப்பாற்ற ,உயன்ற தாத்தா உள்பட நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இது விபத்தா? இல்லை தற்கொலையா? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four peoples died and three peoples injured for fire accident in ulunthur pettai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->