அரசு பேருந்தை சூறையாடிய காட்டு யானை - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


அரசு பேருந்தை சூறையாடிய காட்டு யானை - பயணிகளின் நிலை என்ன?

ஆந்திர மாநிலத்தில் உள்ள, பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் அர்த்தம் கிராமத்தில் நேற்று சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தை காட்டுயானை ஒன்று தடுத்து நிறுத்தியது. இதைப்பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது யானை, பேருந்தின் கண்ணாடிகளை தந்தத்தால் அடித்து உடைத்தது.

அப்போது, பேருந்தின் ஓட்டுநர், திடீரென பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். இருப்பினும், அந்த யானை பேருந்தை விடாமல் துரத்தியது. இதனால் பயந்துபோன பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் ஓடினர். 

அவர்களை யானை துரத்தியதனால் பயணிகள், அலறியபடி தப்பியோடினர். அதன் பிறகு யானை அங்கிருந்து சென்றது. யானை துரத்தியதில், பயணிகள் யாரும் காயமடையவில்லை.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதுபோல், தொடர்ந்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elephant attack govt bus in andira


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->