வரதட்சணை கொடுமை: மகளுடன் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


 கூடுதல் வரதட்சணை கேட்டு  மாமனார். மாமியார் தொல்லை கொடுத்ததால் மருமகள் மகளுடன் சேர்ந்து பெட்ரோலை  ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

சமீபகாலமாக தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால் பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சொல்ல போனால் கடந்த மாதம் திருப்பூரில் இரண்டு பெண்கள் வரதட்சனை கொடுமையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். கணவன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால்   தற்கொலை செய்து கொண்டனர். இதேபோல சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவன் குடும்பத்தினர்  கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் ராஜஸ்தான்  மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் மகளுடன் ஆசிரியை பெட்ரோலை  ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தை சேர்ந்த திலீப் பிஷோனி மற்றும் சஞ்சு பிஷோனி என்ற பெண்ணுக்கும்  கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் யாஷ்வி என்ற மகள் இருந்தார். பிட்கன்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சஞ்சு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே, சஞ்சுவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது மாமனார், மாமியார் கடந்த 5 மாதங்களுக்குமேல் தொல்லை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கூடுதல் வரதட்சணை கேட்டு மீண்டும் மாமனார். மாமியார் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த சஞ்சு தனது மகளுடன் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பெட்ரோலை தன் மீதும் மகள் மீதும் ஊற்றி தீக்குளித்தார். இந்த சம்பவத்தில் மகள் யாஷ்வி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.  அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர். படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dowry brutality A teacher took a shocking decision with her daughter


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->