டெல்லியில் திடீர் புழுதிப் புயல்! 9 வயது சிறுமி உள்பட மூவர் பலி!
Delhi Puzhuthi Puyal Death report
நேற்று மாலை டெல்லியில் ஏற்பட்ட திடீர் புழுதிப் புயலும், கனமழையும் பல உயிரிழப்புகளையும் விபத்துகளையும் ஏற்படுத்தின.
நகரம் முழுவதும் புழுதிப் புயலால் மரங்கள் சாய்ந்து சாலைகள் முடக்கப்பட்டன. டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த தாக்கத்தில் 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்தனர். டெல்லியின் சஹானா என்ற சிறுமி, ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்தபோது, கீழே விழுந்த இரும்பு ஜன்னல் பலகையில் சிக்கி உயிரிழந்தார். சம்பவத்துக்குப் பிறகு கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், நிஜாமுதீனில் லோதி சாலை மேம்பாலம் அருகே மின்கம்பி சரிந்து மாற்றுத் திறனாளி ஒருவர் மீது விழுந்தது. அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் உயிரிழந்தார்.
கோகுல்புரியில் மரம் ஒன்று இருசக்கர வாகனத்தில் விழுந்ததில் அசார் (22) என்பவர் உயிரிழந்தார். முகர்ஜி நகர் பகுதியில் நடைபாதை மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். மேலும் பல இடங்களில் காயம் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளன.
English Summary
Delhi Puzhuthi Puyal Death report