தொடரும் அதிரடி வேட்டை! 900 வங்கதேசத்தினர் விரைவில் நாடுகடத்தல்!
Delhi Bangladesh miscreants
தலைநகர் டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த சுமார் 900 வங்கதேசத்தினர் விரைவில் நாடுகடத்தப்படவுள்ளனர் என்று டெல்லி சிறப்பு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் உரிய ஆவணங்களின்றி வாழும் வெளிநாட்டவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் பகுதியாக டெல்லியில் புலனாய்வு செய்யப்பட்டதில் 900-க்கும் மேற்பட்ட வங்கதேச குடிமக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்ததும், அவர்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தரவுகளின்படி, கிழக்குக் எல்லையின் வழியாக இந்தியாவில் சட்டவிரோத நுழைவுகள் அதிகமாக நடைபெறும் நிலையில், டெல்லி முக்கிய குடியேற்ற மையமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் டெல்லியிலிருந்து 700 வங்கதேசத்தினர் நாடுகடத்தப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கைகள் டெல்லி மட்டுமல்லாது ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர்ந்துவருகின்றன.
English Summary
Delhi Bangladesh miscreants