கோப்ரா பாம்பால் பாம்பு பிடிப்பவருக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்..! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷாரு மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் திவாரி. 45 வயதான இவர், கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். தான் வசித்து வரும் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை வினோத் அருகில் உள்ள வனப்பகுதியில் விடும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் பாம்பு புகுந்ததாக வினோத் திவாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற வினோத் கடைக்குள் புகுந்திருந்த கோப்ரா வகை பாம்பை பிடித்து தான் கொண்டுவந்த பைக்குள் அடைக்க முயற்சித்துள்ளார். பாம்பை பைக்குள் அடைக்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக வினோத்தின் கையில் கோப்ரா பாம்பு கடித்தது. 

இதனால், அங்கிருந்து மருத்துவமனைக்கு வினோத் நடந்து சென்றுள்ளார். ஆனால், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

copra snake attack snake man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->