ம.பி: முன்னாள் மாணவரால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கல்லூரி முதல்வர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் முன்னாள் மாணவரால் பெற்றோர் ஊற்றி தீ வைக்கப்பட்ட கல்லூரி முதல்வர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பி.எம் பார்மசி கல்லூரியின் முதல்வரான விமுக்தா ஷர்மா(50) கடந்த 20ஆம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறைத்த வாலிபர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சடைந்து, கல்லூரி முதல்வரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததில் விமுக்தா ஷர்மாவுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கல்லூரி முதல்வர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா என்பதும், தனது மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கு முதல்வரை சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் சான்றிதழ் வழங்காததால் ஆத்திரமடைந்து முதல்வரை பெற்றோர் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி முதல்வர், இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷஷிகாந்த் கன்கனே உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் முன்னாள் மாணவர் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த சம்பவம் நடந்ததாகவும் உயிரிழந்த கல்லூரி முதல்வரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college principal dies after being set on fire by former student in madhya pradesh indore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->